search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிவிசுவநாத சுவாமி கோவில்"

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. மாலையில் சமய சொற்பொழிவு நடந்தது.

    திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் மேள தாளம் முழங்க வலம் வந்து 9.50 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு தெற்கு மாசிவீதியில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். 
    ×